சென்னை:
மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் காதல் கதையாக ‘அமரம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ள னர். திருஅருள் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படம் ஆக.28-ல் வெளியாக உள்ளது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
படம் பற்றி இயக்குநர் திரு அருள் கிருஷ்ணன் கூறும்போது, “கே.ஜி.எஃப் போன்ற படங்களைப் பார்த்து, அதுபோன்ற திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆக் ஷன் படங்களுக்கு சிறந்த திரைக்கதை மிகவும் முக்கியம். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியில் இருந்து விலகி இந்தக் கதையை உருவாக்கினேன்.
கதை சொல்வதற்காக ஹீரோக்களை சந்திக்க முடியவில்லை. ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி அவரை படத்துக்குள் கொண்டு வருவது என்பது பட்ஜெட் உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய சவாலாக இருக்கிறது.
அவர்களுக்கு அதிகமான ‘கமிட்மென்ட்டும்’ இருக்கிறது. அதனால் புதுமுக நடிகர் நடிப்பில், குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படத்தை உருவாக்கும் முயற்சிதான் இந்தப் படம். இது மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை” என்றார் இயக்குநர்.