வங்காளதேச அணி 15.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி !!

ஜிம்பாப்வே அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக ஜே கும்பி- கிரேக் எர்வின் களமிறங்கினர். கிரேக் எர்வின் 0 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்த சிறிது நேரத்தில் ஜே கும்பி 17 ரன்னிலும் அடுத்து வந்த பிரையன் பென்னட் 16, வில்லியம்சன் 0, கேப்டன் ராசா 0, ரியான் பர்ல் 0, எல் ஜாங்வே 2 என வெளியேறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 41 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து திணறியது.

இதனையடுத்து கிளைவ் மடாண்டே- டபிள்யூ மசகட்சா ஜோடி பொறுப்புடன் ஆடி விளையாடி ரன்களை உயர்த்தினர். கிளைவ் மடாண்டே 43 ரன்னிலும் டபிள்யூ மசகட்சா 34 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் தஸ்கின் அகமது, சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மகேதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன்- லிட்டன் தாஸ் களமிறங்கினர். லிட்டன் தாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் சாண்டோ 21 ரன்னில் வெளியேறினர்.

இதனை தொடர்ந்து தன்சித் ஹசன்- டவ்ஹித் ஹ்ரிடோய் ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். வங்காளதேச அணி 15.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தன்சித் ஹசன் 67 ரன்னிலும் டவ்ஹித் ஹ்ரிடோய் 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *