இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி ; பும்ராவின் வேகத்தில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா!!

கொல்கத்தா:
இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜஸ்​பிரீத் பும்ரா 5 விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்​தி​னார். குல்​தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா பேட்​டிங்கை தேர்வு செய்​தார்.

அந்த அணி​யில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சளா​ரான காகிசோ ரபாடா விலா எலும்​பில் ஏற்​பட்ட காயம் காரண​மாக களமிறங்​க​வில்​லை. அவருக்கு பதிலாக கார்​பின் போஷ் சேர்க்​கப்​பட்​டார்.

இந்​திய அணி 4 சுழற்​பந்து வீச்​சாளர்​கள், 2 வேகப்​பந்து வீச்​சாளர்​கள் கலவை​யுடன் களமிறங்​கியது. சுழலில் குல்​தீப் யாதவ், ரவீந்​திர ஜடேஜா, அக்​சர் படேல், வாஷிங்​டன் சுந்​தர் சேர்க்​கப்​பட்​டனர். வேகப்​பந்து வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுடன் முகமது சிராஜ் களமிறங்​கி​னார்.

அதிர்ச்சி அளிக்​கும் வித​மாக சாய் சுதர்​சன் நீக்​கப்​பட்டு இருந்​தார். 3-வது இடத்​தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்​கு​வார் எனவும் தெரிவிக்​கப்​பட்​டது. இதே​போன்று நிதிஷ் குமார் ரெட்டி இடத்​தில் பேட்​ஸ்​மே​னாக துருவ் ஜூரெல் சேர்க்​கப்​பட்​டிருந்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய தென் ஆப்​பிரிக்க அணிக்கு ரியான் ரிக்​கெல்​டன், எய்​டன் மார்க்​ரம் ஜோடி அற்​புத​மான தொடக்​கம் கொடுத்​தது. இந்த ஜோடி 10 ஓவர்​களில் 57 ரன்​களை விளாசி​யது. அக்​சர் படேல் பந்​தில் மார்க்​ரம், லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி அசத்​தி​னார்.

சிறப்​பாக விளை​யாடி வந்த இந்த ஜோடியை 11-வது ஓவரில் ஜஸ்​பிரீத் பும்ரா பிரித்​தார். ரியான் ரிக்​கெல்​டன் 22 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 23 ரன்​கள் எடுத்த நிலை​யில் பும்ரா பந்​தில் போல்​டா​னார். தனது அடுத்த ஓவரில் எய்​டன் மார்க்​ரம்​மை​யும் வெளி​யேற்​றி​னார் பும்​ரா.

பேக் ஆஃப் தி லென்​தில் பும்ரா வீசிய பவுன்​ஸர் பந்தை எய்​டன் மார்க்​ரம் தடு​மாறியபடி எதிர்​கொண்ட போது கையுறை​யில் பந்து பட்டு விக்​கெட் கீப்​பர் ரிஷப் பந்த்​திடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் களமிறங்​கிய கேப்​டன் தெம்பா பவுமா 11 பந்​துகளில், 3 ரன்​கள் சேர்த்த நிலை​யில் குல்​தீப் யாதவ் பந்​தில் பேக்​வர்டு ஷார்ட் லெக் திசை​யில் நின்ற துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து நடையை கட்​டி​னார். இதன் பின்​னர் களமிறங்​கிய டோனி டி ஸோர்​ஸி, வியான் முல்​டருடன் இணைந்து நிதான​மாக விளை​யாடி​னார்.

மதிய உணவு இடைவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி 27 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 105 ரன்​கள் எடுத்​தது. வியான் முல்​டர் 22, டோனி டி ஸோர்ஸி 15 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

உணவு இடைவேளைக்கு பின்​னர் இந்த ஜோடி தொடர்ந்து விளை​யாடியது. வியான் முல்​டர் 51 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் குல்​தீப் யாதவ் பந்​தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளை​யாட முயன்​ற​போது எல்​பிடள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் தென் ஆப்​பிரிக்க அணி சரிவை நோக்கி பயணித்​தது. டோனி டி ஸோர்ஸி 55 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜஸ்​பிரீத் பும்ரா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

கைல் வெர்​ரெய்ன் 36 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 16 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது சிராஜ் வீசிய 45-வது ஓவரில் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேறி​னார். இதே ஓவரில் மார்கோ யான்​சன் ரன் ஏதும் எடுக்​காமல் போல்​டா​னார்.

ஆல்​ர​வுண்​ட​ரான கார்​பின் போஷ் 23 பந்​துகளில், 3 ரன்​கள் எடுத்த நிலை​யில் அக்​சர் படேல் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதைத் தொடர்ந்து சைமன் ஹார்​மர் 5 ரன்​களில் பும்ரா பந்​தில் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார்.

கடைசி வீர​ராக கேசவ் மஹா​ராஜ் ரன் எதும் எடுக்​காத நிலை​யில் பும்​ரா​வின் யார்க்​கரை தடுத்து விளை​யாட முயன்ற போது எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்து நடையை கட்​டி​னார்.

முடி​வில் தென் ஆப்​பிரிக்க அணி 55 ஓவர்​களில் 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 74 பந்​துகளை எதிர்​கொண்டு ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​கள் சேர்த்து கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இந்​திய அணி தரப்​பில் ஜஸ்​பிரீத் பும்ரா 14 ஓவர்​களை வீசி 5 மெய்​டன்​களு​டன், 27 ரன்​களை வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். குல்​தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், அக்​சர் படேல் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

இதையடுத்து பேட் செய்த இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 20 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 37 ரன்​கள் எடுத்​தது.

தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 27 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் மார்கோ யான்​சன் வீசிய பந்தை கட் ஷாட் விளை​யாட முயன்று போல்​டா​னார்.

கே.எல்​.​ராகுல் 59 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 13 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 38 பந்​துகளில், 6 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். கைவசம் 9 விக்​கெட்​கள் இருக்க 122 ரன்​கள்​ பின்​தங்​கி​யுள்​ள இந்​தி​ய அணி இன்​று 2-வது நாள்​ ஆட்​டத்​தை தொடர்​ந்​து விளை​யாடுகிறது.

13 வருடத்துக்கு பிறகு.. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

கடைசியாக இந்திய அணி கடந்த 2012-ம் ஆண்டு 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி இருந்தது. இதன் பின்னர் 13 வருடங்களுக்கு பிறகு தற்போது விளையாடி வருகிறது.

102 ரன்களுக்கு 10 விக்கெட்: முதல் 10 ஓவர்களில் 57 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 45 ஓவர்களில் மேற்கொண்டு 102 ரன்களை சேர்ப்பதற்குள் 10 விக்கெட்களையும் கொத்தாக தாரை வார்த்தது. அந்த அணியின் பேட்டிங் 4 மணி நேரம் 13 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

2-வது குறைந்த பட்சம்: தென் ஆப்பிரிக்க அணி முதல் விக்கெட்டுக்கு 50+ ரன்களை சேர்த்து குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழப்பது இது 2-வது முறையாகும்.

இதற்கு முன்னர் இந்திய அணிக்கு எதிராக 2018-ம் ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்க அணி 52 ரன்கள் சேர்த்திருந்த போதிலும் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது.

23 டாட் பால்கள்: தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் முதலில் எதிர்கொண்ட 23 பந்துகளில் ரன்கள் சேர்க்கவில்லை. 24-வது பந்தில்தான் அவர், ரன் கணக்கை தொடங்கினார்.

36 ஆயிரம் ரசிகர்கள்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை காண மைதானத்துக்கு 36 ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர்.

பவுன்ஸ் மாறுபாடு: ஈடன் கார்டன் மைதான ஆடுகளத்தில் பந்துகள் பவுன்ஸ் ஆவதில் மாறுபாடுகள் இருந்தன.

இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிரமப்பட்டனர். ஆனால் 159 ரன்களுக்கு ஆட்டமிழக்கக்கூடிய அளவிலான ஆடுகளம் இல்லை என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

6 வருடத்துக்கு பிறகு 5 விக்கெட்: இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

அதன் பின்னர் தொடக்க நாளில் தற்போது ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.

93 வருடத்தில் முதன் முறை: கொல்​கத்தா டெஸ்டில் இந்​திய அணி 6 இடதுகை பேட்​ஸ்​மேன்​களுடன் களமிறங்​கியது.

இந்​தியகிரிக்​கெட்​டின் 93 வருட வரலாற்​றில் ஓர் டெஸ்ட் போட்​டி​யில் 6 இடது கை பேட்​ஸ்​மேன்​கள் விளை​யாடு​வது இதுவே முதன்​முறை​. இந்​திய அணி​யின் லெவனில் இடது கை பேட்​ஸ்​மேன்​களாக யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், வாஷிங்​டன் சுந்​தர், ரிஷப் பந்த், ரவீந்​திர ஜடேஜா, அக்​சர் படேல், குல்​தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்​றிருந்​தனர். 596 போட்​டிகளுக்கு பிறகு இதை இந்​திய அணி செய்​துள்​ளது.

16-வது முறையாக ‘5’: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 16-வது முறையாகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *