பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கருக்கு மே 24 வரை நீதிமன்றக் காவல்!!

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிலும், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ‘சவுக்கு மீடியா’அலுவலகத்திலும் தேனி போலீசார் சோதனை நடத்தினர்.

கஞ்சா, செல்போன்,டேப், 2 லட்சம் பணம், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு மே 24ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஊழல் நடந்ததாக ஆதாரம் இல்லாமல் வீடியோ வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *