கேரளாவில் ரேபிஸ் நோய்க்கு மேலும் ஒரு சிறுமி பலி!!

கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. மேலும் தெருநாய் கடித்து ஏராளமாமனோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.


தெருநாய் கடித்ததன் காரணமாக ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான 2 குழந்தைகள் ஏற்கனவே இருந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுமி பலியாகியிருக்கிறாள்.


கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியை சேர்ந்த நியா பைசல் (வயது7) என்ற சிறுமி கடந்தமாதம் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது, அவரை ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து சிறுமி நியா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.


அங்கு அவருக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. 3 டோஸ் தடுப்பூசிகளும் சிறுமிக்கு போடப்பட்டு இருக்கிறது.

இறுதி டோஸ் நாளை (6-ந்தேதி) போட திட்டமிடப் பட்டிருந்த நிலையில், சிறுமிக்கு திடீரென காய்ச்சல் அடிக்க தொடங்கியது. மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நியா பரிதாபமாக இறந்தாள்.

சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரியவந்தது. தடுப்பூசிகள் போடப்பட்டும் சிறுமி இறந்திருப்பது, அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *