கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள்!!

கரூர்:
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்​பவம் தொடர்​பாக தனி​யார் ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசா​ரணை நடத்​தினர். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யுள்ள அவர்​கள், 300-க்​கும் மேற்​பட்​டோருக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அதன்​படி, இது​வரை சம்​பவம் நடந்த அன்று பாது​காப்பு பணி​யில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸார், பல்​வேறு துறை அதி​காரி​கள், வியா​பாரி​கள், நேரடி சாட்​சிகள் என பல்​வேறு தரப்​பினரிடம் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், சம்​பவம் நடந்த அன்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச்​சென்ற தனியார் ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள் என 6 பேர் நேற்று சுற்​றுலா மாளி​கை​யில் சிபிஐ அதி​காரி​கள் முன்பு ஆஜராகினர்.

அவர்​களிடம், கூட்​டநெரிசல் சம்​பவம் தொடர்​பாக தகவல் தெரி​வித்​தது யார்? எத்​தனை மணிக்கு தகவல் வந்​தது? பாதிக்​கப்​பட்​ட​வர்​களை வாக​னத்​தில் ஏற்​றும்​போது அவர்​கள் என்ன நிலை​யில் இருந்​தனர்? என்பன உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​கள் குறித்து சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *