லக்அனந்தபூர்:
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் ஆந்திராவை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் 40-வது நிமிடத்தில் எஸ்.தர்ஷினியும், 55-வது நிமிடத்தில் அன்விதா ரகுராமனும் கோல் அடித்து அசத்தினர்.
தமிழ்நாடு அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (22ம் தேதி) அருணாச்சலபிரதேச அணியுடன் மோதுகிறது.