காவிரி-வைகை குண்​டாறு திட்​டத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கி, திட்​டத்தை நிறைவேற்​றக் கோரி அகில இந்​திய விவசாயிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை​யில் பேரணி!!

சென்னை: ​
கா​விரி-வைகை குண்​டாறு திட்​டத்தை விரைந்து நிறைவேற்​றக் கோரி விவசாயிகள் சென்​னை​யில் பேரணி நடத்​தினர்.

காவிரி-வைகை குண்​டாறு திட்​டத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கி, திட்​டத்தை நிறைவேற்​றக் கோரி அகில இந்​திய விவசாயிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை​யில் நேற்று பேரணி நடை​பெற்​றது.

எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் தொடங்​கிய பேரணி, தெற்கு கூவம் சாலை வழி​யாக லாங்க்ஸ் கார்​டன் சாலை​யில் முடிவடைந்​தது. இதில் 300-க்​கும் மேற்​பட்ட விவசாயிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் பங்​கேற்​றனர்.

பேரணிக்கு விவ​சாய சங்​கத் தலை​வர் கோவிந்​த​ராஜு தலைமை வகித்​தார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் சங்க செயலாளர் சுருளி​யாண்​ட​வர் கூறிய​தாவது:

திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தல​குண்டு எழு​வனம்​பட்டி மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள 15 கிராமங்​களுக்கு வைகை – சோத்​துப்​பாறை – மஞ்​சளாறு உபரி நீரை கிளை வாய்க்​கால்​கள் அமைத்து பாசன மற்​றும் குடிநீர் பிரச்​சினையை தீர்க்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி 40 ஆண்​டு​களாக விவசாயிகள் போராடி வரு​கின்​றனர்.

இந்​த பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்​வு​காண வேண்​டும். அதே​போல, மந்​த​மாக நடந்து வரும் காவிரி-வைகை குண்​டாறு திட்​டத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கீடு செய்​து, அத்​திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும்.

விவ​சாயப் பொருட்​களை அரசே மொத்த கொள்​முதல் செய்​து, விநி​யோகம் செய்​ய வேண்​டும்.

குறைந்​த​பட்ட ஆதார விலையை சட்​ட​மாக்க வேண்​டும். விவ​சா​யிகளை பாதிக்​கும் மின் மசோ​தா​வைத் திரும்​பப்​ பெற வேண்​டும். இந்​த கோரிக்​கைகள் தொடர்​பாக கிராமப் பஞ்​சா​யத்​துகளி​லும், வட்​டாரத் தலைநகர்​களி​லும் நடத்​தப்​பட்ட ஆர்ப்​பாட்​டங்​கள் அரசாங்​கத்​தின் காதுகளுக்கு எட்​டாத​தால், மாநிலத் தலைநகரில் பேரணியை முன்​னெடுத்​துள்​ளோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *