காய்ச்​சல், சளி பிரச்​சினைக்​கான 174 மருந்துகள் தரமற்​றவை, போலி என்​பது மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் ஆய்​வில் தகவல்!!

சென்னை: ​
காய்ச்​சல், சளி பிரச்​சினைக்​கான 174 மருந்துகள் தரமற்​றவை, போலி என்​பது மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து மாத்​திரை, மருந்​துகளை​யும் மத்​திய, மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் ஆய்வு செய்​கின்​றன.

ஆய்​வில் தரமற்ற, போலி மருந்துகள் கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

அதன்​படி, கடந்த மாதம் 1,000-க்​கும் மேற்​பட்ட மருந்துகள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன. அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித் தொற்​று, ஜீரண மண்டல பிரச்​சினை உள்​ளிட்ட பாதிப்​பு​களுக்கு பயன்​படுத்​தப்​படும் 167 மருந்துகள் தரமற்​ற​தாக​வும், 7 மருந்துகள் போலி​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்​டது.

அந்த விவரங்​கள் பொது​மக்​களின் விழிப்​புணர்​வுக்​காக, மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் cdsco.gov.in என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. விளக்​கம் கேட்டு சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *