இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, சித்திரை-29 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி காலை 10.36 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 9.26 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : மரண/அமிர்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் பவனி வரும் காட்சி. வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் பொங்கல் பெருவிழா.

காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் உற்சவாரம்பம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம்.

திருநெல்வேலி சமீபம் 3 ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் – சிந்தனை

ரிஷபம் – நல்லெண்ணம்

மிதுனம் – தேர்ச்சி

கடகம் – அமைதி

சிம்மம் – ஆர்வம்

கன்னி – பாராட்டு

துலாம் – பெருமை

விருச்சிகம் – உதவி

தனுசு – பாசம்

மகரம் – முயற்சி

கும்பம் – ஆக்கம்

மீனம் – பக்தி

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *