கரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் – ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்தல்!!

சென்னை:
கரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக​வின் தேர்தல் அறிக்கை​யில் “பணி​யில் இருந்த​போது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்​துவர்​கள், மருத்​துவம் சார்ந்த பணியாளர்​கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்​கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்​களின் குடும்பத்​தா​ருக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​படும்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர்.

ஆனால், திமுக அரசு பொறுப்​பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலை​யில், அதை செயல்​படுத்​தவில்லை.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பள்ளிப்​பட்டு அரசு மருத்​துவ​மனை​யில் பணியாற்றிய மருத்​துவர் விவே​கானந்தன் 2020 நவ. 22-ம் தேதி கரோனா தொற்று காரணமாக உயிரிழந்​தார். அவருக்கு மனைவி​யும், இரு குழந்தை​களும் உள்ளனர்.

அவர் இறந்து 4 ஆண்டுகள் முடிந்​துள்ள நிலை​யில், இதுவரை அவருக்கு தமிழக அரசு சார்​பில் இழப்​பீடோ, கருணை அடிப்​படையிலான வேலையோ வழங்​கவில்லை. மருத்துவரின் தந்தை​தான் அந்தக் குடும்பத்தை தற்போது காப்​பாற்றி வருகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *