தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 111 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் நுழைந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என முழக்கமிட்டனர். இதனை கேட்டதும் டிவில்லியர்ஸ் சிரித்தபடி கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *