பிஹாரில் தேர்தல் பணிகளுக்கு இடையே பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில் இறங்கி மீன்​டிபிடித்த காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி!!

பாட்னா:
பிஹாரில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் சூடு​பிடித்​துள்​ளது. கடுமை​யான தேர்​தல் பணி​களுக்கு இடையே காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில் இறங்கி மீன்​டிபிடித்து மகிழ்ந்​தார்.

படகு மூல​மாக குளத்​துக்​குள் சென்ற ராகுல் தண்​ணீரில் குதித்து நீச்​சல் அடித்​தார். அப்​போது விகாஸ்​ஷீல் கட்​சி​யின் (விஐபி) நிறு​வனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்​தார்.

இதுதொடர்​பான வீடியோவை தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்து ராகுல் காந்தி கூறி​யுள்​ள​தாவது: மீனவர்​கள், பிஹார் பொருளா​தாத்​தில் ஒரு முக்​கிய அங்​க​மாக உள்​ளனர்.

அவர்​களுக்கு என்​றுமே எனது ஆதரவு உள்​ளது. பிஹாரின் பெகுச​ரா​யில் உள்ள மீனவர் சமூகத்​தினரை விஐபி கட்​சி​யின் தலை​வர் முகேஷ் சாஹ்னி​யுடன் இணைந்து சந்​தித்​த​தில் மகிழ்ச்​சி.

மீனவர்​களின் பணி போ​ராட்​டம் மற்​றும் பிரச்​சினை​கள் நிறைந்​தவை. இருப்​பினும், அவர்​களின் கடின உழைப்​பு, ஆர்​வம் மற்​றும் ஒவ்​வொரு சூழ்​நிலை​யிலும் வணி​கத்​தைப் பற்​றிய அவர்​களின் ஆழமான புரிதல் ஊக்​கமளிக்​கிறது.

பிஹாரின் ஆறு, குளம், கால்​வாய் மற்​றும் அவற்​றின் பகு​தி​யில் வசிக்​கும் மீனவர்​கள் மாநிலத்​தின் பொருளா​தா​ரத்​தில் ஒரு முக்​கிய பகு​தி. அவர்​களின் உரிமை, மரி​யாதைக்​காக ஒவ்​வொரு அடி​யிலும் அவர்​களு​டன் சேர்ந்து நிற்​கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *