கோவை;
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
மேதகு இந்தியப் பிரதமர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப்புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநகர எல்லைக்குட்பட்ட ஏற்கனவே உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் சிங்காநல்லூர், SIHS காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி பகுதிகள், கொடிசியா வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான சிட்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், இராமநாதபுரம், பந்தயசாலை ஆகிய பகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அவர்களின் செயல்முறைகளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் 17.11.2025 அன்று இரவு 07.00 மணி முதல் 19.11.2025 இரவு 07.00 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் விமானங்கள் (டிரோன்கள்), பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் 17.11.2025 அன்று இரவு 07.00 மணி முதல் 19.11.2025 இரவு 07.00 மணி வரையில் தடைசெய்யப்பட்ட கால அளவில் தடையினை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்படுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.