கெய்ரோ:
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 584 -18x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உக்ரைனின்பாவ்லோ கொரோஸ்டிலோவ் 584 – 29x புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார்.
பிரான்ஸின் யான் பியர்லூயிஸ் ஃப்ரிட்ரிசி 583 –-18x புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்தத் தொடரை இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்துடன் நிறைவு செய்தது.
சீனா: 12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என 21 பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது. தென் கொரியா: 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 14 பதக்கங்கள் பெற்று 2-வது இடம் பிடித்தது.