அ​தி​முக​வுக்கு வாக்களிக்கும் வாக்காளர்​களில் ஒருவர் பெயர் கூட விடுபடக் கூடாது – எஸ்ஐஆர் பணிகளில் திமுக​வினரின் தில்லு​முல்​லுகளை தடுத்து நிறுத்​துங்கள்!! மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு….

சென்னை:
“அ​தி​முக​வுக்கு வாக்களிக்கும் வாக்காளர்​களில் ஒருவர் பெயர் கூட விடுபடக் கூடாது. எஸ்ஐஆர் பணிகளில் திமுக​வினரின் தில்லு​முல்​லுகளை தடுத்து நிறுத்​துங்கள்” என்று அதிமுக மாவட்டச் செயலா​ளர்​களுக்கு கட்சியின் பொதுச்​செய​லாளர் பழனிசாமி அறிவுறுத்​தி​யுள்​ளார்​.

தமி​ழ​கத்தில் எஸ்ஐஆர் பணிகள் இறுதி​கட்டத்தை எட்டி​யுள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த நவ.4-ம் தேதி முதல் இதுவரை 6.16 கோடி பேருக்கு (96 சதவீதம்) 3.19 கோடி பேரின் படிவங்கள் (50 சதவீதம்) கணினியில் பதிவேற்​றப்​பட்​டுள்ளன.

பூர்த்தி செய்த படிவங்களை வழங்க டிச.4-ம் தேதி வரை, அதாவது இன்னும் 9 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணி, அதிமுக சார்பில் நியமிக்​கப்​பட்டுள்ள பிஎல்​ஏக்கள் (வாக்​குச்சாவடி முகவர்கள்) ஆகியோரின் பணிகள் குறித்து அதிமுக மாவட்டச் செயலா​ளர்கள், மாவட்ட பொறுப்​பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் ஆகியோ​ருடனான ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்​செயலாளர் பழனிசாமி பங்கேற்று, சென்னை ராயப்​பேட்​டையில் உள்ள கட்சி தலைமை அலுவல​கத்தில் இருந்​தவாறு, அனைத்து மாவட்ட நிர்வாகி​களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதற்காக அலுவல​கத்தில் ராட்சத டிஜிட்டல் திரைகள், ஒலிப்​பெருக்கி வசதிகள் செய்யப்​பட்​டிருந்தன. இக்கூட்​டத்தில் பழனிசாமி பேசிய​தாவது:

நம்முடைய மாவட்டச் செயலா​ளர்கள், மாவட்டப் பொறுப்​பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் வேகமாக​வும், துரித​மாகவும் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள வேண்டும். தங்கள் மாவட்​டத்தில் இருக்கும் தொகுதி​களில் உள்ள அனைத்து பகுதி​களிலும் எஸ்ஐஆர் படிவம் கொடுக்​கப்​பட்டு விட்டதா என்று ஆய்வு செய்ய வேண்டும். யாருக்​காவது படிவம் கொடுக்​கப்​ப​டாமல் இருந்தால் உடனடியாக நமது பிஎல்​ஏக்கள் மூலமாக பிஎல்​ஓக்களை தொடர்​பு​கொண்டு வழங்கு​வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர்​களிடம் கொடுக்​கப்பட்ட படிவத்தை முறையாக திரும்பப் பெற்று பிஎல்​ஓ​விடம் சமர்ப்​பிக்க வேண்டும். வேகமாக துரிதமாக இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.

திமுக​வினர் தில்லு​முல்லு செய்வதை தடுத்து நிறுத்தி, அனைத்து வாக்காளர்​களும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்​படுத்​துங்கள்.

அதிமுக​வுக்கு வாக்களிக்கும் வாக்காளர்​களின் பெயர்கள் ஒன்று கூட விடுபட்டு விடக்​கூ​டாது. அதனால், எஸ்ஐஆர் பணியை அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

வெளியூர் செல்லக்கூடாது: இதில் பிஎல்​ஏக்​களின் பங்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, இப்பணியில் ஆளும் திமுகவின் தலையீடு, அதிகாரிகள் மெத்தனம் தெரிய​வந்​தால், உடனடியாக மாவட்ட தலைமைக்​கும், வழக்கறிஞர்கள் அணிக்கும் தெரிவிக்​கப்​பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரி​யிடம் புகார் தெரிவித்து, அதன் விவரங்களை தலைமைக்கும் அனுப்ப வேண்டும். இன்னும் 9 நாட்கள் இருக்​கிறது.

அதனால் டிச.4-ம் தேதி வரை மாவட்டச் செயலா​ளர்கள் யாரும் வெளியூர்​களுக்கு சென்று​விடக்​கூ​டாது. சொந்த மாவட்​டங்​களுக்கு சென்று கண்காணிப்பை தீவிரப்​படுத்த வேண்டும்.

சில மாவட்​டங்​களில் எஸ்ஐஆர் பணி கண்ணிப்பில் தொய்வு இருப்பதாக அறிகிறேன். இதனால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்​டால், தொடர்​புடைய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் உள்ளூரில் மக்கள் சந்திக்கும் பிரச்​சினை​களை முன்​வைத்து போ​ராட்​டங்​களை முன்​னெடுங்​கள்.

நமது ஆட்​சி​யில் மக்​களுக்கு செய்த சாதனைப் பட்​டியலை ஒவ்​வொரு வீட்​டுக்​கும்​ கொண்​டு​போய்​ சேர்க்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

‘எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்’ – மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *