2026-ம் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சியம் வெற்றி பெறும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!!!

2026 சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணித் தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையழுத்தானது. அதிமுக கூட்டணியல் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

இந்நிலையில் சென்னையில் அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , “மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து புரட்சி செய்த அதிமுக அலுவலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி.

2011-ல் அதிமுக, தேமுதிக இடையே உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது; அதிமுக கூட்டணி என்பது தேமுதிகவுக்கு ஒரு நல்ல ராசியான கூட்டணி. வரும் மக்களவைத் தேர்தலிலும், 2026-ம் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சியம் வெற்றி பெறும்;அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி பல போட்டிகள், சவால்களை கடந்து வெற்றி பெறும் . 2 தெய்வங்களின் ஆசியோடு எங்களின் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *