”நாமக்கல்லில் சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தாவைக் கொன்ற பேரன் கைது”!!

நாமக்கல்லில் சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தாவைக் கொன்ற பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சிக்கன் ரைஸ் பூச்சி மருந்து கலந்து கொடுத்த குற்றத்திற்காக அவரது பேரன் பகவதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர் பகவதி என்பவர் சமீபத்தில் சிக்கன் ரைஸ் வாங்கியதாக தெரிகிறது. இதை தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு அவர் கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட பகவதியின் தாத்தா சண்முகநாதன் , தாய் நதியாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிப்புக்கு காரணமாக இருந்த சிக்கன் ரைஸ் விநியோகித்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன் சிக்கன் ரைஸ் உணவை பரிசோதனை செய்ததில் அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். தாய் நதியாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பேரன் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தது தெரியவந்தது.

கல்லூரி மாணவர் பகவதி தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் தாயும் , தாத்தாவும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிக்கன் ரைஸ்சில் பூச்சி மருந்து கலந்து தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு கொடுத்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் பகவதியை கைது செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *