சீர்காழியில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 பேரைக் வெறிநாய் கடித்துக் குதறியதால் பொதுமக்கள் அச்சம் ஏற்பட்டது.
சீர்காழியில் பூக்கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அகோரம், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மற்றும் சாலையில் நின்றுகொண்டிருந்த பிரசன்னா என 4 பேரை அடுத்தடுத்து நாய் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சிக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.