புதுடெல்லி:
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: சிந்து நதிக்கு அருகிலுள்ள பகுதியான சிந்து மாகாணம் 1947-ல் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சென்றது. அந்த பகுதியில் வாழ்ந்த சிந்தி மக்கள் இந்தியாவுக்கு வந்தனர்.
எல்.கே. அத்வானி போன்ற தலைவர்களின் தலைமுறையைச் சேர்ந்த சிந்தி இந்துக்கள், இந்தியாவிலிருந்து சிந்து பகுதி பிரிவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிந்து இந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்றும் சிந்து இந்தியாவிலிருந்து பிரிந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அத்வானி தனது நூலில் எழுதியதை குறிப்பிட விரும்பு கிறேன்.
சிந்துவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதுகின்றனர்.
இன்று, சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாகரிக ரீதியாக, சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.
நிலத்தைப் பொறுத்தவரை, எல்லைகள் மாறக்கூடும். யாருக்குத் தெரியும், நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பலாம். இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.