இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் உள்​ளிட்ட 7 பேருக்கு விசிக சார்​பில் விருதுகளை வழங்கிய திருமாவளவன்!!

சென்னை:
இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் உள்​ளிட்ட 7 பேருக்கு விசிக சார்​பில் விருதுகளை அக்​கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவன் வழங்கி கவுர​வித்​தார்.

ஒடுக்​கப்​பட்ட மக்​களின் நலன்​களுக்​காக பாடு​பட்டு வரும் பட்​டியலினம் அல்​லாத சான்​றோரை அடை​யாளம் கண்​டு, அவர்​களை ஊக்​கப்​படுத்​தும் வகை​யிலும் சமூகம், அரசி​யல் மற்​றும் கலை-இலக்​கி​யம் ஆகிய துறை​களில் அரும்​பணி​யாற்றி வரும் ஆளு​மை​களுக்​கும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் விசிக சார்​பில் விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அம்​பேத்​கர் சுடர், பெரி​யார் ஒளி, காம​ராசர் கதிர், அயோத்​தி​தாசர் ஆதவன், காயிதேமில்​லத் பிறை மற்​றும் செம்​மொழி ஞாயிறு ஆகிய விருதுகளு​டன், 2022-ம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ என்ற விருதும் கூடு​தலாக வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான விசிக விருதுகள் வழங்​கும் விழா, சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள காம​ராஜர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. விழாவுக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் தலைமை தாங்​கி​னார்.

கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர்​கள் சிந்​தனைச் செல்​வன், ரவிக்​கு​மார் எம்​பி, பொருளாளர் எஸ்​.எஸ்​.​பாலாஜி, முதன்​மைச் செய​லா​ளர் ஆளூர் ஷா நவாஸ், சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஜோதி​மணி ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

சமூக நீதித்​துறை அமைச்​சர் வன்​னியரசு வரவேற்றுப் பேசி​னார். தகு​தி​யுரையை வாசித்த திரு​மாவளவன், 7 பேருக்​கான விருதுகளை​யும், ரூ.50 ஆயிரத்​துக்​கான பொற்​கிழியை​யும் வழங்​கி​னார்.

மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் கே.சொக்​கலிங்​கத்​துக்கு அம்​பேத்​கர் சுடர், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியனுக்கு மார்க்ஸ் மாமணி, மனித உரிமைப் போராளி வழக்​கறிஞர் ஹென்றி டிபேனுக்கு பெரி​யார் ஒளி, சாமித் தோப்பு அடிகளார் பால.பிரஜாப​திக்கு காம​ராசர் கதிர், சமூக செயற்​பாட்​டாளர் ரூத்​மனோர​மாவுக்கு அயோத்​தி​தாசர் ஆதவன், ஐஎன்​டிஜே மாநில துணைத் தலை​வர் முகமது முனீருக்கு காயிதே மில்​லத் பிறை, நாமக்​கல் தமிழறிஞர் பொ.வேல்​சாமிக்கு செம்​மொழி ஞாயிறு விருதுகள் வழங்​கப்​பட்​டன.

விழா​வில் மு.வீர​பாண்​டியன் பேசும்​போது, “சமூகம் மாற வேண்​டும் என்று களமாடு​கிற ஒரு பேரியக்​கத்​தின் சார்​பில் கிடைத்​துள்ள இந்த விருது மிகுந்த மரி​யாதைக்​குரியது.

தேர்​தலில் தவெக வெற்றி பெற்று ஆதரவு கோரிய நிலை​யில், ஆளுநர் ஆட்​சி​யில் அமர்ந்​து​விடக்​கூ​டாது என்​பதை ஆராய்ந்து நாங்​கள் தவெக​வுக்கு ஆதரவு அளித்​தோம். எங்​களை யாரும் நிர்​பந்​திக்​க​வில்​லை.

சிலர் சொல்​வது​போல் சோபா, கல்​லாப்​பெட்டி போன்ற நிபந்​தனை​கள் எல்​லாம் எங்​களுக்கு இல்​லை.

விடு​தலைக்கு போராடு​கிறவர்​கள் அரு​கில் இவை ஒரு​போதும் வராது. பாஜக​தான் எங்​கள் பகையே தவிர, மற்ற ஜனநாயக சக்​தி​கள் எங்​களுக்கு பகையல்ல” என்​றார்.

வரவேற்​புரை ஆற்​றிய அமைச்​சர் வன்​னியரசு, “கடைசி மனிதனுக்​கும் ஜனநாயகம், எளிய மக்​களுக்​கும் அதி​காரம் என்ற திரு​மாவளவனின் முழக்​கம் இன்​று​வரை அடித்​தட்டு மக்​களுக்​கான அரசி​யலை முன்​னெடுத்து வரு​கிறது.

‘ஆட்​சி​யிலும் பங்​கு, அதி​காரத்​தி​லும் பங்​கு’ என்று அவர் வைத்த முழக்​கம் இன்று எட்​டப்​பட்​டிருக்​கிறது.

விசிகவை சிதைக்க வேண்​டும், கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேற்ற வேண்​டும் என்று பரப்​பப்​பட்ட அவதூறுகளை எல்​லாம் முறியடித்து தமிழக அரசி​யலில் அசைக்க முடி​யாத சக்​தி​யாக விசிக நிற்​கிறது.

விசிகவை விடுத்து தமிழகத்​தில் எந்த அரசி​யலும் நடக்​காது” என்று தெரி​வித்​தார்.

விழா​வில் விசிக அமைப்​புச் செய​லா​ளர் லயன் ஆர்​.பன்​னீர்​தாஸ், தலைமை நிலை​யச் செய​லா​ளர்​கள் இளஞ்​சேகு​வே​ரா, தமிழ்ச்​செல்​வன் செய்​தித் தொடர்​பாளர்​ கு.​கா.​பாவலன்​ உள்​ளிட்​ட நிர்​வாகி​கள்​, தொண்​டர்​கள்​ திரளாக பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *