”சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு ஏற்படும்” – ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 2021-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வின்படி 101 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

136 மில்லியன் மஞ்சள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 315 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் `லான்செட்’ நடத்திய சமீபத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 20 நாடுகளில் சுமார் 2 மில்லியன் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் பன்றி இறைச்சி, கொத்து இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதற்கும் 2-வது வகை நீரிழிவு நோய்க்கும் நேரடித் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு நாளைக்கு 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வழக்கமாக உட்கொள்வது 2 துண்டு பன்றி இறைச்சியை சாப்பிடுவதற்கு சமம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது அடுத்த 10 ஆண்டுகளில் 2-வது வகை நீரிழிவு நோய் வருவதற்கான 15 சதவீத ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 100 கிராம் பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சியை உட்கொள்வது 2-வது வகை நீரிழிவு நோயின் 10 சதவீத அதிக ஆபத்துடன் தொடர்புடைய ஒரு சிறிய மாமிசத்துக்கு சமம் என தெரியவந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், கோழி, வான்கோழி அல்லது வாத்து போன்ற 100 கிராம் கோழிகளை வழக்கமாக உட்கொள்வது 8 சதவீத அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி.மோகன் கூறுகையில், `லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்தின் ஆய்வுகள் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதற்கும் நீரிழிவு அபாயத்திற்கும் தொடர்பு உள்ளது.

இந்த சான்றுகள் நமது உணவுத் தேர்வுகள் ஒட்டு மொத்த நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மேலும் ஆராய வைக்கிறது. ஆனாலும் இந்தியாவில் உட்கொள்ளப்படும் சிவப்பு இறைச்சியின் அளவு குறைவாகவே உள்ளது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *