எந்த ஒரு ஆடு​களத்​தி​லும், எந்த ஒரு சூழலிலும் விளை​யாடு​வதற்கு எங்​களிடம் வீரர்​கள் இருக்​கிறார்​கள்​ – தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பேட்டி!!

கொல்கத்தா:
கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார்.

இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களிடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் டெஸ்ட் தோல்விக்​குப் பிறகு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கவுதம் கம்​பீர் கூறிய​தாவது:

”முதல் டெஸ்ட் போட்​டிக்​கான கொல்​கத்தா மைதான ஆடு​களம் விளை​யாட முடி​யாத அளவுக்கு கடின​மான ஆடு​களம் இல்​லை.

இந்த மாதிரி​யான ஆடு​களத்​தையே நாங்​கள் கேட்​டிருந்​தோம். இது ​போன்ற மைதானத்​தைத் தயாரித்​துத் தரு​மாறு ஆடுகள பராமரிப்​பாளரிடம் கேட்​டிருந்​தோம்.

அவர் எங்​களுக்கு மிகுந்த ஆதர​வாக இருந்​தார். இந்த ஆடு​களம் வீரர்​களின் மன உறு​தியை சோதிக்​கும் வித​மாக இருந்​தது. நன்​றாக தடுப்​பாட்​டத்தை வெளிப்​படுத்​திய வீரர்​கள் இந்த ஆடு​களத்​தில் ரன்​கள் குவித்​துள்​ளனர். நாங்​கள் இந்த மாதிரி​யான ஆடு​களத்​தைத் ​தான் எதிர்​பார்த்​தோம்.

இது மோச​மான ஆடு​களம் இல்​லை. அக்​‌சர் படேல், தெம்பா பவு​மா, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் இந்த ஆடு​களத்​தில் நன்​றாக விளை​யாடி ரன்​கள் குவித்​துள்​ளனர்.

ஆடு​களம் சுழற்​பந்​து ​வீச்​சுக்கு சாதக​மானது என்று சிலர் கூறுகின்​றனர். ஆனால் முதல் இன்​னிங்​ஸில் அதிக விக்​கெட்​களைக் கைப்​பற்​றியது வேகப்​பந்து வீச்​சாளர்​கள் ​தான் என்​பதை நாம் மறந்​து​விட முடி​யாது.

சுழற்பந்​து ​வீச்​சுக்கு ஆடு​களம் உதவும் வித​மாக இருக்க வேண்​டும் என நாங்​கள் கேட்​டுக் கொண்​டோம். அதனால், எந்த அணி, டாஸ் வெல்​கிறது என்​பது முக்​கிய​மான விஷய​மாக இருக்​க​வில்​லை.

இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி வென்​றிருந்​தால், ஆடு​களம் குறித்து இத்​தனை கேள்வி​கள் இருந்​திருக்​காது. எந்த ஒரு ஆடு​களத்​தி​லும், எந்த ஒரு சூழலிலும் விளை​யாடு​வதற்கு எங்​களிடம் வீரர்​கள் இருக்​கிறார்​கள்​. இவ்​வாறு கவுதம்​ கம்​பீர்​ கூறி​னார்​.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி: தென் ஆப்பிரிக்க அணி சாதனை – இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி சாதனை படைத்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக 2010-ம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

அதன் பின்னர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 தோல்விகளையும், ஒரு டிராவையும் கண்டது. இந்த 15 ஆண்டு காலத்தில் ஒரு போட்டியில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் தற்போதைய வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சாதனை படைத்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *