ஆடு​களம் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக அமைக்​கப்​பட்​டதன் காரண​மாகவே இந்​திய அணி தோல்​வியை சந்​தித்​துள்​ளது – ஹர்பஜன் சிங் ஆதங்கம்!!

புதுடெல்லி:
தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் 124 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 93 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது.

இந்த ஆடு​களம் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக அமைக்​கப்​பட்​டதன் காரண​மாகவே இந்​திய அணி தோல்​வியை சந்​தித்​துள்​ளது என்​றும், நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் மோச​மான தோல்வி​களை சந்​தித்த பிறகும் இந்​திய அணி பாடம் கற்​றுக்​கொள்​ள​வில்லை என்றும் விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.

இந்​நிலை​யில் இதே ஆடு​களத்​தில் கடந்த 2001ம் ஆண்டு ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் 13 விக்​கெட்​கள் வீழ்த்தி இந்​திய அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்த, முன்​னாள் சுழற்​பந்து வீச்​சாள​ரான ஹர்​பஜன் சிங் தனது யூடியூப் சானலில் கூறி​யிருப்​ப​தாவது:

“டெஸ்ட் கிரிக்​கெட்​டையே முற்​றி​லும் அழித்​து​விட்​டார்​கள். முதல் டெஸ்ட் போட்டி நடை​பெற்ற கொல்​கத்தா ஈடன் கார்​டன் ஆடு​களத்தை போன்​று​தான் பல வருடங்​களாக அமைத்து வரு​கிறார்​கள்.

இதுகுறித்து யாரும் பேசுவது கிடை​யாது. ஏனெனில் இது​போன்ற ஆடு​களங்​களில் அணி வெற்றி பெறுகிறது. யாரேனும் விக்​கெட்​கள் வீழ்த்​துகிறார்​கள். அதன் வாயி​லாக அவர்​கள் சிறந்​தவர்​களாகிறார்​கள்.

எனவே எல்​லோரும் எல்​லாம் நன்​றாக நடப்​ப​தாக உணர்​கிறார்​கள். ஆனால் இந்த பழக்​கம் இன்று தொடங்​கிய​தாக நான் நினைக்​க​வில்​லை. இது பல ஆண்​டு​களாக நடந்து வரு​கிறது. இது தவறான விளை​யாட்டு முறை. இப்​படி செயல்​பட்​டால் எந்த வகை​யிலும் முன்​னேற முடி​யாது.

செக்​கில் கட்​டப்​பட்ட எருது போன்று வட்​டமடித்​துக் கொண்​டு​தான் இருக்க வேண்​டும். முற்​றி​லும் சுழலுக்கு சாதக​மான ஆடு​களங்க​ளால் நீங்​கள் வெற்றி பெறுகிறீர்​கள், ஆனால் அதனால் உண்​மை​யான பலன் எது​வும் இல்​லை.

ஒரு கிரிக்​கெட் வீர​ராக, நீங்​கள் வளர ​முடி​யாது. நிலை​மையை நன்​றாகப் உற்று கவனிக்க வேண்​டிய நேரம் இது. பேட்​ஸ்​மேன்​கள் ரன்​கள் எடுப்​பது எப்​படி என்று தெரி​யாமல் குழப்​பமடை​யும் ஆடு​களங்​களில் போட்​டிகளை விளை​யாடு​வது கவலைக்​குரியது. இது அவர்​களுக்கு அடிப்​படை​யான பேட்​டிங் திறமை இல்​லாதது போன்ற தோற்​றத்தை கொடுக்​கும்.

திறமை காரண​மாக அல்​லாமல், ஆடு​களத்​தின் தன்மை காரண​மாகவே வீரர்​கள் ஆட்​ட​மிழக்​கிறார்​கள் என்​றால், திறமை​யான பந்து வீச்​சாள​ருக்​கும் திறமை​யான பேட்​ஸ்​மேனுக்​கும் என்ன வித்​தி​யாசம் இருக்​கும்?

டெஸ்ட் கிரிக்​கெட் இப்​படி விளை​யாடப்​படு​வதை பார்ப்​பது வருத்​த​மாக இருக்​கிறது. நாம் ஏன் இதைச் செய்​கிறோம் என்று எனக்​குத் தெரிய​வில்​லை” இவ்​வாறு ஹர்​பஜன் சிங் கூறி​யுள்​ளார்.

இந்​திய அணிக்​காக ஹர்​பஜன் சிங் 103 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 417 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​திய அணி 0-1 என பின்​தங்​கி​யிருக்​கும் நிலை​யில் கடைசி டெஸ்ட் போட்​டி வரும்​ 22-ம்​ தேதி குவாஹாட்​டி​யில்​ தொடங்​குகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *