ஆசிய வில்வித்தை இறு​திப் போட்​டி​யில் கொரியா அணியை வீழ்த்தி 2 தங்​கப் பதக்​கம் வென்​ற இந்​திய அணி!!

டாக்கா:
ஆசிய வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் போட்டி டாக்கா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் ஜோதி சுரே​கா, தீப்​ஷி​கா, பிரித்​திகா பிரதீப் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 236 – 234 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கொரியா அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

காம்​பவுண்ட் கலப்பு அணி​கள் பிரி​வில் அபிஷேக் வர்​மா, தீப்​ஷிகா ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 153 – 151 என்ற கணக்​கில் வங்​கதேச அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

ஆடவருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் அபிஷேக் வர்​மா, சாஹில் ராஜேஷ் ஜாதவ், பிரதமேஷ் பால்​சந்​திரா ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 229 – 230 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கஜகஸ்​தான் அணி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம்​ பெற்​றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *